ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
எது ஏன் என்று
பதில் யார் சொல்வார்
யார்க்கும் போல் ஒரு அன்னை தந்தை
உனக்கும் இருந்ததுண்டு
யாருக்கும் போல் ஒரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியை போலே ஓர் துணை
இருந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ?
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தம் இங்கு
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலி எல்லாம் சொலைகாக
வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வம்
காவலை கொண்டு சென்றதேனோ?
One version of this song was sung by Shreya Ghosal. I can confidently say that only in Raaja's music most singers pronounce the letter 'ழ' correctly.
No comments:
Post a Comment